பல்லவி
நே மொர பெட்டிதே மதி3லோன
1நீகாயாஸமேலரா
அனுபல்லவி
ஈ மானவாத4முலனு கோரி
எல்ல வாரல வலெனுண்ட3கனு (நே)
சரணம்
2தபமொகடியொனர 3ஜேஸிதினோ
தா3னம்பொ3கடி 3அடி3கி3தினோ
கபடாத்முடை3 3பலிகிதினோ
கலி ஹர த்யாக3ராஜ நுத (நே)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நே/ மொர/ பெட்டிதே/ மதி3லோன/
நான்/ (உன்னிடம்) முறை/ யிட்டால்/ மனதிற்குள்/
நீகு/-ஆயாஸமு/-ஏலரா/
உனக்கு/ ஆயாசம்/ ஏனய்யா/
அனுபல்லவி
ஈ/ மானவ/-அத4முலனு/ கோரி/
இந்த/ மனிதரில்/ இழிந்தோரை/ கோரி/
எல்ல வாரல/ வலெ/-உண்ட3கனு/ (நே)
(மற்ற) எல்லோரையும்/ போல/ இல்லாமல்/ நான்...
சரணம்
தபமு/-ஒகடி/-ஒனர ஜேஸிதினோ/
(வரம் கோரி) தவம்/ ஏதும்/ இயற்றினேனோ/
தா3னம்பு3/-ஒகடி/ அடி3கி3தினோ/
தானம்/ ஏதும்/ கேட்டேனோ/
கபட/-ஆத்முடை3/ பலிகிதினோ/
வஞ்ச/ உள்ளத்தினனாகி/ (ஏதும்) பேசினேனோ/
கலி/ ஹர/ த்யாக3ராஜ/ நுத/ (நே)
கலியை/ அடக்குவோனே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நீகாயாஸமேலரா - நீகாயாஸமுயேலரா.
3 - ஜேஸிதினோ - அடி3கி3தினோ - பலிகிதினோ : ஜேஸிதினனோ - அடி3கி3தினனோ - பலிகிதினனோ.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
2 - தபமொகடி - தவம் ஏதும் இயற்றினேனோ. எந்த தெய்வத்தினை நோக்கித் தவம் இயற்றப்படுகின்றதோ, அந்த தெய்வம் வரமருளக் கடமைப் படுகிறது. அந்த மாதிரி, வரம் பெறுவதற்குத் தவமியற்றி, உன்னை நான் கட்டுப்படுத்தவில்லை என்கின்றார்.
மற்றெல்லோரையும் போல - செல்வந்தரை இரந்து திரிவோர்.
கலியை - கலியுகத்தில் காணப்படும் கேடுகளை என.
Top